சனி, 7 ஆகஸ்ட், 2010

தமிழ்

தற்காலத்தில் தமிழின் நிலைப் பற்றி பேசும் போது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. தமிழில் பேசுவதைவிட ஆங்கிலத்தில் பேசுவது பெருமைக்கு உரியது என்ற கருத்து மேலோங்கிக் கொண்டு வருகிறது.
பழமையும் தொன்மையும் எக்காலத்திற்கும் ஏற்ற மொழி என்ற பெருமை கொண்ட மொழி நம் தமிழ்மொழி. தற்போதைய சூழலில் நம் மொழிக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டுள்ளது என்பது காலத்தின் கட்டாயம். இத்தகைய தடைகள், சிதைப்புகள் என எல்லா சவால்களையும் தாண்டி வரும் மொழி மேற்கண்ட சிறப்புகளை கொண்டிருக்கும். எனவே தற்போது ஏற்பட்டுள்ள சிதைப்புகள் அழிப்புகள், இடர்கள் இன்னல்கள் மற்றும் நோய்களைப்பற்றிப் பெரும் கவலை கொண்டிருக்காமல் நாம் நமது மொழியை நம்பிக்கையோடு வளர்ப்போம். மோசமான சூழ்நிலை என புறங்கூறாமல் இச்சோதனைக் காலத்தை உறுதியோடு வெற்றி கொள்வோம். வென்றபின் மகிழ்ச்சி கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக