சனி, 7 ஆகஸ்ட், 2010

போலி மருத்துவம்

சில நாட்களாகவே போலி மருத்துவர்கள் பிடிபடுவதாக நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன. யார் போலி மருத்துவர்கள் என்றால் முறையாக ஆங்கில மருத்துவக் கல்லூரிகளில் பயின்று சான்றிதழ் பெறாதவர்கள். ஆனால் இந்த வகை மருத்துவர்களில் ஒரு சிலர் சான்றிதழ் பெறவில்லையே தவிர மிகச் சிறந்த மருத்துவப் பணியை செய்து வருகின்றனர். இவர்கள் சித்த மருத்துவத்தையோ, ஓமியோபதி மருத்துவத்தைப் பயின்றவர்களா இருப்பார்கள். அதே போல ஆங்கில மருத்துவக் கல்லூரியில் முறையாக மருத்துவம் பயின்று பட்டமும் சான்றிதழும் பெற்ற மருத்துவர்கள், மருத்துவப் பணியை சேவையாகச் செய்யாமல் வியாபாரமாக செய்து கொண்டு இருக்கின்றவர்களும், தவறான மருந்தை மட்டுமே கொடுத்து கடைசி வரை பயிற்சி மருத்துவர்களாகவே இருக்கின்றனர். பொறுப்பற்றவர்களாக, பொழுது போக்கிற்காக மருத்துவர்களை விட பொறுப்பான போலி மருத்துவர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவர்கள்.

எனக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்த போது அறுவை சிகிச்சைக்கும் முன் மயக்க மருந்து கொடுக்க முறைப்படி கல்லூரியில் பயின்ற, (பயிற்சி) மற்றும் சான்றிதழ் பெற்ற மருத்துவர் ஊசியை உட்செலுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தார். ஆனால் அங்கு செவிலியராக பணியாற்றிக் கொண்டிருந்த அனுபவம் உள்ள ஒரு பெண் ஊசியை வாங்கி நொடிப் பொழுதில் சரியாக உட்செலுத்தினார். இங்கு முறைப்படி மருத்துவம் கற்ற மருத்துவரை விட மருத்துவருடன் பணியாற்றும் போது கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த செவிலியர் சிறப்பாக செயல்பட்டார். மருத்துவம் என்பது குறிப்பிட்ட வயதிற்குள் கற்ற வேண்டும் என்ற நிலையை மாற்றி, தகுதிக்கு தேர்வு வைத்து அதன் மூலம் மருத்துவராக அங்கீகாரம் வழங்கலாம்.