சனி, 7 ஆகஸ்ட், 2010

கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதியின் மொழிப் பற்றிற்கு ஈடு இணை ஏதுமில்லை. தன் இனத்தை அழித்து மொழியைக் காக்கும் அவரது செயற்கறிய செயலை கண்டு பெருமை கொள்ள வேண்டுமேயன்றி அவர் இனத்தை அழிக்கப் புறப்பட்ட மூடர் அல்ல.

கலைஞர் தன்னுடைய மொழிவளத்தினால் பணம் பொருள் ஈட்டியதைக் குறையாக கூறுகின்றனர். இது முற்றிலும் தவறு. தமிழ் மொழியினால் ஒரு பயனும் இல்லை என்று கூற்று பொய்யாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி ஒருவருக்கு முதல்வர் பதவி வரை வழங்கியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பிழை என்ன என்றால் அவர் பொருளை நேரிய வழியில் ஈட்டவில்லை ஆட்சியைக் கைப்பற்றி மிகப் பெரிய அளவிலான ஊழலை உற்பத்தி செய்து கொண்டு இருக்கின்றார். அவர் இலக்கியவாதியாக மட்டும் இருந்திருந்தால் நம் தமிழ்த்தாயின் மணி மகுடத்தில் ஒரு மரகதமாக வீற்றிருப்பார். ஆனால் அவருக்கு பீடித்திருந்த பண நோய் ஆட்சி பிடிப்பு ஊழல் உற்பத்தி கொள்ளை என இறங்கி விட்டதால் அவர் தமிழ் தாயை பீடித்திருக்கும் ஒரு தொழு நோயாக உள்ளார்.

கலைஞர் கருணாநிதி, இத்தாலியப் பெண்ணுக்கு மஞ்சள் அரைக்கும் பணிக்கு தன்னையும் தன் குடும்பத்தையும் அற்பணித்து விட்டார். எனவே தமிழகத்தைப் பற்றிய சிந்திக்க அவரால் இயலவில்லை.

மேலும் சட்டமன்றத்தில் கூறுகிறார், எம்.ஜி.ஆர் “ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே” என்று தன்னை நினைத்துப் பாடியதாக புகழ்ந்து கொள்கிறார். ஆம் கருணாநிதியை போன்றவர்களின் போக்கைக் கணித்து அன்று பாடிப்போயுள்ளார்கள். ஆனால் பாடல் மட்டும் வேறு அது “காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று” என்ற பாடல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக