சனி, 7 ஆகஸ்ட், 2010

கல்வி முறை

தற்போதைய கல்வி மெகலன் கல்விமுறையின் அடிப்படையில் உள்ளது. இம்முறையானது ஆங்கிலேயர்களுக்குத் தேவையான எழுத்தர் கணக்கர் போன்ற பணிகளுக்காக ஆட்களை தயார் செய்ய ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இக்கல்விமுறையின் பரிணாம வளர்ச்சியின் விளைவு தற்போது சிந்திக்கத் தூண்டுவதை முடக்கி மனப்பாடத்திற்கு வழி வகுக்கிறது. மேலும் ஆசிரியர் மாணவர் இடைவெளியும் அதிகமாக உள்ளது, அறிவைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பதும் மிகக்குறைவு. இதில் மாற்றம் வேண்டும். ஒரு ஆசிரியர் பாடத்தை நடத்திய பின் அதனை மாணவர்கள் எவ்வளவு பேர் புரிந்து கொண்டார்கள் என்று கவனிப்பதில்லை. ஓரிருவர் புரிந்து கொண்டாலே போதும் என்ற மனப்பான்மை. எளிதில் புரிந்து கொள்ளும் மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். இதனால் மாணவர்களுக்கிடையே உள்ள இடைவெளி குறையும். மேலும் மாணவர்கள் அந்த வயதொத்தவர்களுக்கு புரியும்படி சொல்லிக் கொடுக்க முடியும். இவ்வாறு ஒருவருக்கொருவர் சொல்லிக் கொடுக்கும் போது குழு மனப்பாண்மையும் வளரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக