வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தனித்தமிழகம்

இன்றைய சூழல்நிலையில் தனித்தமிழகத்தின் அதன் வாய்ப்புகள், மற்றும் சிக்கல்கள் குறித்து சில ஆய்வுகள்.

தனித் தமிழக முழுக்கத்தை தந்தை பெரியார், இந்திய விடுதலைக்கு முன்பே வைத்திருந்தார். அது முடக்கப்பட்டு, தற்போது ஈழத்தமிழர் இனப்படு கொலைக்குப் பின் மீண்டும் உருவெடுத்துள்ளது. அன்று அந்நிய நாட்டு வெள்ளையர்களிடமிருந்து, ஒன்றிணைக்கப்பட்டிருந்த இந்தியா, ஒன்று பட்டு போராடி அந்நிய நாட்டானை வெளியேற்றியது. ஆனால் தற்போது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு என்ற நிலையில்லை. உரிமைக்கான விடுதலை, இனப்பாதுகாப்பு என்ற நிலை. இது, அரசுகளைப் பொறுத்த வரை பிரிவினைவாதம் பயங்கரவாதம். இந்த உரிமைக்கான விடுதலை, இனப்பாதுகாப்பிற்கான போர்களை ஒடுக்க அனைத்து அரசுகளும் வரிந்து கட்டிக் கொண்டு ஒன்றிணைந்து, ஒடுக்கி நசுக்கி அழிக்கும். மக்களின் பாதுகாப்பு மற்றும் தேவைகளுக்காக அரசுகள் என்ற நிலை மாறி அதிகார வெறியர்களின் (அரசின்) பாதுகாபிற்காக மக்கள் என்றுள்ளது.

தற்போது இந்தியாவில் ௨௮ (28) மாநிலங்கள் உள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தனிநாட்டு கோரிக்கைகளை வைத்துள்ளன. இந்த மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, ஒரே அணியாக நின்று, ஒரே குரலில் கோரிக்கை வைக்கும் போது அது வலிமை உள்ளதாக இருக்கும். தனித்தனியாக வைக்கும் போது அக்கோரிக்கைகள் வலுவிழந்து போகிறது. தற்போது தமிழகத்திற்கும் கருநாடகத்திற்கும் இடையே காவேரி நதிநீர் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதன் காரணமாக இரு நாடுகளிக்கிடையே (மாநிலங்களுக்கு) கசப்புணர்வு உள்ளது. இரு நாடுகளும் இந்தியாவிடமிருந்து விடுபட விரும்புகின்றன. இந்த இரு நாடுகளும் தங்களின் கசப்புணர்வை ஒதுக்கி வைத்து, முதலில் ஒன்றிணைந்து இந்தியாவிடமிருந்து விடுபட வேண்டும். இல்லையேல் இந்திய இறையாண்மை, இந்த கசப்புணர்வை மேலும் மேலும் வளர்த்து, நிரந்தர அடிமைகளாகத்தான் வைத்திருக்கும்.

தற்போது இந்தியா போர்க் கருவிகள், உளவு அமைப்புகள் பொருளாதாரம் ஆகியவற்றில் வலுவாக உள்ளது. பிரிய வேண்டிய நாடுகளிடம் அது வலுவாக இல்லை, இருக்கக்கூடியதும் இந்தியாவின் பிடியில் உள்ளது. உலக மயமாக்கலுக்குப் பின் அரசியல்வாதிகளின் பார்வை மிகக் குறுகிப் போய்விட்டது. பணமனநோய் பீடித்திருக்கிறது. எனவே அரசியல்வாதிகளின் பார்வையில், ஒரே இந்தியாவாக இருக்கும் போது தான் எண்ணவே முடியாத அளவிற்கு கொள்ளையடிக்க முடியும். சிறு நாடுகளாகப் பிரிந்தால் அடிக்கும் மிகக் குறைந்த அளவே கொள்ளையடிக்க முடியும் என்பதால் அதற்கு முட்டுக் கட்டையாக இருப்பார்கள்.

சீனா போன்ற ஆதிக்க வெறி கொண்ட நாடுகள் நம் மீது ஆக்கிரமிப்பு செய்யும் வாய்ப்பு உள்ளது. தற்போது பிரிந்துள்ள சூடானுக்கு மேற்குலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காரணம் தெற்கு சூடானில் உள்ள எண்ணை வளத்தைத் தாரைவார்த்தது மற்றும் மதம் சார்ந்த காரணங்களுக்காக ஆதரவு தெரிவித்துள்ளன. இக்கோணத்தில்பார்க்கும் போது நமக்கு ஆதரவு என்பது கேள்விக் குறியே. ௨௫ (25) ஆண்டுகளுக்கும் மேல் போராடிய, உலகின் மிகச் சிறந்த விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ௨௩ (23) உலக நாடுகள் ஒன்றிணைந்து மிகப் பெரிய இன அழிப்போடு முடக்கியுள்ளனர். ஒவ்வொரு இன விடுதலையின் போதும் மிகப் பெரிய இப்படுகொலைகள் நடத்தப்படுவதும் நடந்து கொண்டு உள்ளன. ஆனால் யூதர்கள் தனி நாடு அமைக்க தன் இனத்தை பலி கொடுக்கவில்லை இனப்படுகொலை காரணமாக தனி நாடு என்ற கருத்து எழுந்தது. மிகச் சாதுர்யமாக, தங்களுக்கு என தனி நாட்டை அமைத்துக் கொண்டார்கள்.

மேற்குலக நாடுகளின் ஆதரவின்றி தனி நாடு என்பது மிகப் பெரிய சவால இருக்கிறது. மேற்குலக நாடுகளின் ஆதரவு வேண்டுமெனில், தனி நாடு அமைப்பதினால் ஏதேனும் ஒரு வழியில் அவர்களுக்கு ஆதாயம் இருக்க வேண்டும். இல்லையெனில் விடுதலைப் போருக்கு (உட்நாட்டு) மறைமுகமாக உதவிக் கொண்டு ஆயுத விற்பனையில் ஆதாயம் தேடி, பன்னெடுங்காலமாக போர்களை நடத்திக் கொண்டே இருப்பார்கள். நம்மிடம் எண்ணை வளம் இல்லை. தண்டகாரன்யா காடுகளில் உள்ள கனிம வளத்தை இந்திய அரசே, அந்த நாடுகளுக்கு ஒப்படைத்து விட்டது. அங்கு போராடும் அமைப்புகள், அவ்வளங்களை அந்த நாடுகளிடமிருந்து மீட்கவே போரை நடத்துகின்றன. இந்த நிலையில் மேற்குலக நாடுகள் இந்தியாவோடு இணைந்து, போராடும் அமைப்புக்களை நசுக்கி அழிக்கும்.

மனித வளம் இல்லாமல் இயற்கை வளங்களை பயன்படுத்த இயலாது. நம்மிடம் உள்ள மனித வளத்தை சீர்படுத்தி அதன் மூலம் நகர்வுகளை நகர்த்தலாம். மற்ற நாட்டு மக்களைவிட இந்திய நாடுகளில் உள்ள மக்களுக்கு அறிவுத்திறன் கூடுதல். ஆனால் ஒரு ஒழுங்கு கிடையாது. தன்னம்பிக்கை, உயர்ந்த மனப்பாங்கு, தன்னடக்கம் (சுய கட்டுப்பாடு) குறைவு அல்லது இல்லை.




மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் முதல் வரிசையில் ஒவ்வொரு தனித்தனி எண்ணாக எடுத்துப் பார்த்தால் மிகக் குறைந்த மதிப்பு கொண்டவை ஆனால் தகுதிக்கு தக்கவாறு வரிசையாக வைத்தால் அதன் மதிப்பு ௧௧௰௰ (1100).

இரண்டாவது வரிசையில் தகுதியை சிறிது மாற்றினால் அதன் மதிப்பு குறைகிறது.

மூன்றாவதாக வரிசையில் தனித்த மதிப்பில் உயந்த எண்ணை ஈற்றில் வைக்கும் போது அதன் மொத்த மதிப்பு மேலே உள்ள மதிப்புகளுடன் ஒப்பிட்டால் மிகக்குறைவு. இதே எண்ணில் சரியான படி வரிசைப்படுத்தினால் மற்ற இரு மதிப்புகளை விட மிக அதிகம்.

ஆனால், இறுதி வரிசையில் உள்ளபடி வைத்தால் ஒரு எண் என கூற இயலாது. மதிப்பை இழந்துவிடுகிறது. தனித்தனியாக, அதனதன் கோணத்தில் வைத்து மதிப்பிட முடியுமே அற்றி ஒன்றிணைத்து மதிப்பிட இயலாது. இதில் மூன்றாவதாக உள்ள எண் ஒன்பதா ஆறா எனக் கூற முடியவில்லை. இந்த வரிசையில் உள்ள ஒவ்வொரு எண்ணையும் நேர்படுத்தி, பின் உயர்மதிப்பைப் பெற சரியான இடங்களில் வைக்க வேண்டும். நமது மனித வளத்தின் நிலையும் இறுதி வரிசையில் உள்ளவாறு இருக்கிறது. இக்கடுமையான பணியினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையானது அரசியல், தொழில் வளர்ச்சி என அனைத்து துறையிலும் உள்ளது.

பகுத்தறிவு என்பது இறை மறுப்பு என்பதல்ல. அறிவைப் பயன்படுத்தி பகுத்து ஆராய்ந்து அறிவியலை வளர்த்து வாழ்க்கையை உயர்த்துவது. உளவியல் என்பது தற்போது மருத்துவத்துறையின் ஒரு பகுதி. தற்போது உளவியல் என்ற அறிவியல் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. உளவியல் பார்வையில் நாம் நம்மை ஆராய வேண்டியுள்ளது. பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டிருந்த நம் இனத்திற்கு தன்னம்பிக்கை, உயர்ந்த மனப்பாங்கு, தன்னடக்கம் ஆகியவற்றில் பின்தங்கியுள்ளோம். அதனால் ஆங்கிலத்திற்கு அடிமையாக உள்ளனர் நம் மக்கள். தன் மொழியின் மீது நம்பிக்கையிமில்லை, ஆங்கிலம் கற்கும் துணிவுமில்லை. புலம்பிக் கொண்டே, நிலையில்லாமல் இருக்கின்றனர். மொழியைப்பற்றிய தெளிவு கிடையாது. தன்னம்பிக்கையும் உயர்ந்த மனப்பாங்கும் வளரும் போது இப்புலம்பல்கள் இல்லாமல் தனது திறன்களை வளர்த்து ஒரு ஒப்பற்ற மனித வளம் உருவாகும். இந்த வளத்தின் மூலமாக தொழில்நுட்பங்களையும் தொழில்களையும் கைப்பற்ற வேண்டும். அதன் மூலமும், இனபடுகொலைகளின்றி நாம் நாட்டு விடுதலையைப் பெறலாம்.

ஈழத்தில் ௨௫(25) ஆண்டுகளுக்கு மேல், உலகின் தலைசிறந்த விடுதலை இயக்கம் நடத்தி வந்த விடுதலைப் போர் நசுக்கப்பட்டு, இனமே கிட்டத்தட்ட ஈழத்தில் அழிக்கப்பட்டு விட்டது. இந்த சூழலில், நாம் இருக்கும் நிலையில் நாம் எவ்வளவு காலம் நடத்தப் போகிறோம்? எவ்வளவு பேரை இழக்கப் போகிறோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக