வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

பரப்புரைகள்

தமிழக காங்கிரசு கட்சியில் உள்ளவர்களைப் பொருத்தவரை மிகக்குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள். ராசிவ் காந்தியின் மரண நிகழ்வினை காரணம் காட்டி தன் இனத்தை அழிப்பதை வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதை நியாயப் படுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கின்றனர். ஒரு விடுதலை இயக்கத்திற்காக ஒரு இனத்தையே படுகொலை, இன அழிப்பு செய்து கொண்டு இருக்கும் நடுவண் அரசை எதிர்க்க, ஆளும் (ஊழல்) திமுக விற்கோ தமிழக காங்கிரசுக்கோ துணிவில்லை. இராசிவ் காந்திக்கு அரசியல் அனுபவம் எவ்வளவு? அரசியல் அனுபவம் துளியளவும் இல்லாத ஒருவரை பிரதமராக்கினார்கள். இது ஒரு மிகப்பெரிய வரலாற்று பிழை. அனுபவமுள்ளவர்கள் காரங்கிரசில் இல்லையா? அல்லது ராசீவிற்கு தொலை நோக்குப் பார்வையுடன் ஆலோசனை கூற யாரும் முற்பட்டார்களா? இல்லையே. தன் சுய இலாபத்திற்குத் தான் சண்டையி்ட்டுக் கொண்டார்களே அன்றி தேசிய நலனில் அக்கரை இல்லை. ஒரு வேலை இந்திரா காந்திக்கு மகன்கள் இல்லாமல் இருந்திருந்து, ஒரு நாயை செல்லமாக வளர்த்திருந்தால் அந்த நாய் அல்லவா காங்கிரசின் தலைவராக இருக்கும். அந்த நாய்க்கு அல்லவா சேவகம் செய்வார்கள். இதே நிலை தான் சோனியாவிற்கும் ராகுலிற்கும்.

தலைமை அமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் அமைச்சரகமும் அதிகாரிகளின் செயல்படுகளும் அமைய வேண்டும். ஆனால் அன்று அனுபவமற்ற ராசீவ் காந்தி, இன்று பொம்மை மன்மோகன் சிங் ஆகியோர் அதிகாரிகளின் கைப்பாவையாக செயல்பட்டதால் ஈழத்துச் சிக்கல்களுக்கு தவறான முடிவுகள் எடுக்கப்பட்டது. காரணம் இந்தியாவில் தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் இடையே உள்ள கசப்புணர்வின் வெளிப்பாடு. வெளியுறவு செயலகம் மலையாளிகளின் ஆதிக்கம் நிறைந்தது. உள் நாட்டில் உள்ள கசப்புணர்வானது, தமிழர் என்ற காரணத்தினால் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்றும் ஈழத்தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் என்றும் உலகிற்கு காரணம் காட்டி இந்த படுபாதகச் செயலை செய்து கொண்டு இருக்கின்றனர். பாதுகாப்பு ஆலோசகராக இருந்த இனப்படு கொலைகாரன் எம்.கே.நாராயணனும், பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர் மேனன் போன்ற மலையாள வெறியர்களின் கைப்பாவையாகத் தான் தலைமை அமைச்சர் உள்ளார்.

இந்தியா தனித்த இறையாண்மை கொண்ட நாடு என்ற நிலை முற்றிலும் ஒழிந்து போய்விட்டது. முன்பு எப்படி ஆங்கிலேயர்களிடம் வியாபாரம் என்று ஆரம்பித்து காலணியாக்கத்திற்கு உட்பட்டு பின் அடிமையாக்கப்பட்டதோ, அதே நிலைக்கு மீண்டும் காங்கிரசு கட்சி மிக வேகமாகக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடே கணக்கற்ற ஊழல்களும், ஒவ்வொரு ஊழலிலும் எண்ணிவிட முடியா தொகை இழப்பும், அயல் நாடுகளில் கருப்புப்பண பதுக்கலும், ஊழல் குறித்த வழக்குகளை நடுவண் புலனாய்வுத்துறையே திரும்பப் பெரும் அவலமும். மாவோயிட்டுகளின் வளர்ச்சியும்.

அதுமட்டுமா இந்தியா என்றும், இந்திய இறையாண்மையென்றும் இந்திய ஒருமைப்பாடு குறித்துப் பேசும் தமிழக காங்கிரசு கட்சி உறுப்பினர்கள், என்றைக்காவது இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கொடூரமாக கொலைகள் நடத்தியது குறித்து கண்டனத்தையாவது தெரிவித்ததுண்டா? எங்கே போயிற்று இவர்களின் இறையாண்மை? தமிழக காங்கிரசு கட்சியினரின் மனப் போக்கானது குரங்கு, புண்ணை ஆற வைப்பது போன்றது. குரங்கிற்கு சிறிய புண் ஏற்பட்டால் அப்புண்ணை சரி செய்ய, அப்புண்ணை தரையில் வைத்துத் தேய்த்துக் கொண்டே இருக்குமாம். காங்கிரசு ஆதரவாளர்கள், குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர் போன்றவர்கள். குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர், அப்பழக்கம் கொடியது என்று தெரிந்தும் மீள முடியாமல் அதைத் தொடர்வதைப் போல, காங்கிரசின் ஆதரவாளர்கள் அக்கட்சியின் கொடூரப் போக்கு தெரிந்தும் அதிலிருந்து மீளத் தெரியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர்.

தனித் தமிழகம் என்ற கோரிக்கை முன்வைக்கும் போது, தமிழர்கள் எனக் குறுகிய மனப்பான்மையுடன் பிரிவினை பேசுவதாகக் கூறும் இவர்கள் தங்கள் பார்வை தொலைநோக்கு பார்வை எனக் கூறுவர். வானில் வட்டமிடும் கழுகினால் கீழே உள்ள அனைத்தையும் விரிவாக காண இயலும். ஆனால் அது தன் இரையான இறந்த சடலங்கள் மட்டுமே காணும். அதே போலத்தான காங்கிரசிற்கும் இறந்து போன மோகன்தாசு காரம்சாந் காந்தி, இறந்து போன இந்திரா காந்தி, இறந்து போன ராசீவ் காந்தியை விட்டால் இவர்களுக்கு பேச ஒன்றும் கிடையாது.
இது போல பல உதாரணங்களை அக்கட்சியின் குறுகிய மணப்பான்மையினை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு துணை முதல்வர் இறுதிவரை நின்று அனைவருக்கும் அவரே வழங்குகிறார் இது தி.மு.க.வின் பரப்புரை. இதே து.மு ஒரு முறை தொலைக்காட்சியில் செய்தி படிக்கும் பெண் ஒருவரை கீழ்தரமான எண்ணத்துடன் துரத்தியதை தமிழகம் அறியும். இப்படிப்பட்ட ஒன்று நின்று கொண்டு கொடுப்பது எதற்காக?

அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஆ.இராசாவைப்பற்றி கருணாநிதி, “குற்றம் சாட்டப்பட்டால் குற்றவாளியா?” என்றார், “விசாரணை நடத்தினால் குற்றவாளியா?” என்றார், “சிறைப்படுத்தப்பட்டால் குற்றவாளியா?” என்கிறார், “தண்டணை வழங்கினால் குற்றவாளியா?” என்பார். குற்றவாளி என்றால் இவர் அகராதியல் என்ன பொருளோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக