வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ஈழப் போர் வெளிப்படுத்திய “உலகின் போக்கு”

ஈழவிடுதலைப் போரின் முடிவு பல உண்மைகளை உலகிற்கு அறிவித்திருக்கிறது. மனித இனத்தின் வளர்ச்சி என்பது காட்டுமிராண்டி காலம் தொடங்கி நாகரீக உலகம் என்ற நிலைக்கு பல்வேறு வடிவங்களில் வளர்ச்சி பெற்றது. அதில் ஒன்று மனிதனை மனிதன் கொன்று தின்ற நிலையில் இருந்து மனிதனை மனிதன் அழிப்பதே தவறு என்ற நிலைக்கு மாறியது. அதன் வெளிப்பாடாக மனித உரிமை அமைப்புகளின் வளர்ச்சியும் அதன் மனிதாபமான நோக்கமும் அமைந்திருந்தது. ஆனால் இந்த இனப்படுகொலை மீண்டும் காட்டுமிராண்டி காலத்திற்கு மனித இனம் திரும்பவும் வேகமாக சென்று கொண்டிருப்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது. மனித உரிமை மீறல், போர் குற்றம் இழைத்தல் போன்றவற்றை தட்டிக் கேட்க வேண்டிய ஐ.நா அவையும் அமைதியான நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. போர்க் குற்றம் குறித்து விசாரணை நடத்துவது போல நாடகமாடிக் கொண்டிருக்கிறது. உலகில் எந்த ஒரு மனித உரிமை அமைப்பினாலும், இனபடுகொலை பற்றி முன்பே அறிவிக்கப்பட்ட நிலையிலும், கண்முன்னே நடந்து கொண்டிருந்த போதும் எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. உலகின் காவலனாகக்காட்டிக் கொள்ளும் அமெரிக்காவும் அமைதியான வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. “அமைதியாக” நின்று வேடிக்கை பார்த்ததற்காக அதன் அதிபர் பராக் ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதோ? ஈழ இனப்படுகொலை மட்டுமல்ல Wiki Leaks என்ற இணைதளம் வெளிக் கொணர்ந்த செய்தியும் அதுவே.

ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல இந்திய தமிழர்களும் அடிமைவாழ்வையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெளிப்பட்டிருக்கிறது. இந்தியா ஒரு சனநாயக நாடு என்ற போலித் தோற்றம், ப.சிதம்பரம் பாராளுமன்றத்தேர்தல்-௨௰௰௯(2009)-ல் அடைந்த படுதோல்வியை, வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டதிலிருந்தும் வைகோ பெற்ற வெற்றியை தோற்றதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு விடுதலைக்காக போராடும் உணர்வு இருக்கிறது. ஆனால் இந்தியத் தமிழர்கள் அடிமைகளாக மட்டுமல்ல கோழைகளாக மூளை மழுங்கடிக்கப்பட்ட, அறிவு, உணர்வு குன்றிய மனிதர்களாக, குறுகிய கண்ணோட்டம் கொண்ட மனித விலங்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ளதும் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக