வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

போராளிகள்

காலத்தின் தேவையை உணர்ந்து தகுதியான மாற்றங்களுக்காக போராடுபவர்கள். மேலே கூறிய சாலை எடுத்துக்காட்டை எடுத்துக் கொண்டால் சாலையைச் சீரமைக்கவோ, மாற்றுச் சாலையை ஏற்படுத்தப போராடுபவர்கள். இப்போராளிகளின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் என பார்த்தால் வறுமையில் இருக்கும். காரணம் தன்னுடைய தனி வாழ்க்கையை பற்றிச் சிந்தித்து செயல்பட தோன்றாது. இப்போராளிகளின் சிந்தனை முழுக்க சமூகம் சார்ந்து இருக்கும். இப்போராளிகளின் எதிர்காலம் என்பது கேள்விக்குறிதான். காரணம் போராட்டம் என்பதே அரசிற்கு எதிராக இருப்பதால் சிறைக்கோ, சிதைக்கோ எந்நேரமும் செல்ல வேண்டியிருக்கும். மேலும் இவர்களின் வாரிசுகள் பெரும்பாலும் போராளிகளாக இருப்பதில்லை. இவர்களின் எண்ணங்கள் குறுகியிருப்பதில்லை, பரந்து விரிந்து இருக்கும். சமூகச் சிக்கல்களைத் தீர்க்க கடுமையான போராட்டங்களை நிகழ்த்த வேண்டியிருப்பதால் ஒன்றிணைதல் என்பது தேவையானதாக உள்ளது. எனவே இவர்களின் வட்டம் பெரியதாக இருக்கும். இப்போராளிகள் மக்களிடமிருந்துதான் உருவாகின்றனர். எந்த மனிதனிடம் சமூக கண்ணோட்டமும் அதற்கான செயல்பாடும் உள்ளதே அவர் போராளியாக உருவாகிறார். இப்போராளிகள் போராடுவது மக்களிடமிருந்து, மக்களுக்காக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக